வேட்பாளர்கள் இனி அதிகம் செலவு செய்யலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 6, 2022

வேட்பாளர்கள் இனி அதிகம் செலவு செய்யலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வேட்பாளர்கள் இனி அதிகம் செலவு செய்யலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!




பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை உயர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கு முன் வேட்பாளர் செலவு வரம்பு 2014ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்டது. பின்னர் 2020ஆம் ஆண்டில் 10% உயர்த்தப்பட்டது.


இதையடுத்து வேட்பாளர் செலவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் குழு அமைத்தது. இதில் அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நோக்காளர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. இதில், தேர்தல் செலவு அதிகரித்திருப்பது தெரியவந்தது.

அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப வேட்பாளர் செலவு வரம்பை உயர்த்தும்படி குழு பரிந்துரைத்தது. இந்நிலையில் குழுவின் பரிந்துரைகளை ஏற்ற இந்திய தேர்தல் ஆணையம், வேட்பாளர் செலவு வரம்பை உயர்த்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் இதுவரை 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம்.
சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் இனி 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இப்புதிய வரம்புகள் இனி வரும் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad