திருப்பி அனுப்பப்பட்ட வெல்லம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு சர்ச்சை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 14, 2022

திருப்பி அனுப்பப்பட்ட வெல்லம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு சர்ச்சை!

திருப்பி அனுப்பப்பட்ட வெல்லம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு சர்ச்சை!


பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட 100 டன் சரியில்லாத வெல்லம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் வகையில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு சில ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களின் எடை குறைவாக இருப்பதாகவும், பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதை அடுத்து பொது மக்களுக்கு தரமான பொங்கல் பரிசு தொகுப்பு சென்றடைவதை அமைச்சர்கள், ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.3

இந்நிலையில் தற்போது சுமார் 100 டன் அளவிற்கு வாங்கப்பட்ட வெல்லம் சரியாக இல்லாத நிலையில் அவை அனைத்தையும் வாங்கிய இடத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவைமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் படி மிளகு உள்ளிட்ட சில பொருட்களும் திருப்பி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெல்லத்துடன் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டால் அவை ஏழு நாட்களுக்கு மேல் சரியாக இருக்காது என்று கூறுகின்றனர். இவ்வாறு வெல்லம் செய்வது உணவு கலப்படம் குற்றமாகும். ஆகவே இந்த நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad