ஸ்டாலினுக்கு ஆதரவாக புகழேந்தி: ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 14, 2022

ஸ்டாலினுக்கு ஆதரவாக புகழேந்தி: ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்!

ஸ்டாலினுக்கு ஆதரவாக புகழேந்தி: ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்!



ராஜேந்திர பாலாஜி மீது அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான அவர், கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், “கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021 ஜனவரி 3ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக தொண்டர்களிடையே பேசிய ராஜேந்திர பாலாஜி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசினார்.


மேலும், 'இது எஸ்.பி.வேலுமணியின் கோட்டை. எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது. தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசினார். தொண்டாமுத்தூர் வரும்போது மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுக்க தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இந்து, முஸ்லிம்மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சொற்களையும் அவர் பயன்படுத்தினார்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரக்குறைவாக பேசியுள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளேன்” என்றார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் புகழேந்தி சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதி காத்து வந்த அவர் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்காக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளது கவனம் பெற்று வருகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad