அரசு அதிகாரி டூ மோடியின் தளபதி.. யார் இந்த ஏ.கே.ஷர்மா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 14, 2022

அரசு அதிகாரி டூ மோடியின் தளபதி.. யார் இந்த ஏ.கே.ஷர்மா?

அரசு அதிகாரி டூ மோடியின் தளபதி.. யார் இந்த ஏ.கே.ஷர்மா?


உ.பி பாஜகவில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள ஏ.கே.ஷர்மாவின் வரலாறு.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அரசு அதிகாரியாக பணிபுரிந்து உ.பி பாஜகவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவரும், பிரதமர் மோடியின் நம்பிக்கையை பெற்றவருமான ஏ.கே.ஷர்மாவை பற்றி பார்க்கலாம்.
ஏ.கே.ஷர்மா எனப்படும் அரவிந்த் குமார் ஷர்மா அரசு அதிகாரியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். எனவே, ஏ.கே.ஷர்மா பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கையை பெற்றவர் என்று கூறுகின்றனர்.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏ.கே.ஷர்மா முக்கிய பங்கு வகித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று டெல்லி வந்தபிறகும் பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளர் பொறுப்பு ஏ.கே.ஷர்மாவுக்கு கொடுக்கப்பட்டது.
ஏ.கே.ஷர்மா எனப்படும் அரவிந்த் குமார் ஷர்மா அரசு அதிகாரியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். எனவே, ஏ.கே.ஷர்மா பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கையை பெற்றவர் என்று கூறுகின்றனர்.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏ.கே.ஷர்மா முக்கிய பங்கு வகித்துள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று டெல்லி வந்தபிறகும் பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளர் பொறுப்பு ஏ.கே.ஷர்மாவுக்கு கொடுக்கப்பட்டது.

சொல்லப்போனால், சிறப்பாக செயல்படும் அரசு அதிகாரிகளை பிரதமர் மோடி தன் கவனத்தில் வைத்திருப்பார். அந்த வகையில் ஹர்தீப் சிங் பூரி, ஜெய்சங்கர், ஆர்.கே.சிங் ஆகிய முன்னாள் அரசு அதிகாரிகள் தற்போது மத்திய அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் ஏ.கே.ஷர்மாவும் இடம்பெற்றுள்ளார். விருப்ப ஓய்வு கேட்டு ராஜினாமா செய்த மூன்று நாட்களில் உத்தரப் பிரதேச பாஜகவில் இணைந்தார் ஏ.கே.ஷர்மா. சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் மோடியின் ஆசியுடன் உத்தரப் பிரதேச பாஜக துணைத் தலைவராகவும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

இந்த சூழலில் கொரோனா இரண்டாம் அலை உத்தரப் பிரதேசத்தை உலுக்கியது. மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆலோசனை வழங்கினார் ஏ.கே.ஷர்மா. பிரதமர் மோடியும் பொதுக்கூட்டங்களில் ஏ.கே.ஷர்மாவை பாராட்டி பேசியிருந்தார்.

அரசியல் ரீதியாக ஏ.கே.ஷர்மா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்? மத்திய அரசு திட்டங்கள் உ.பி மக்களுக்கு கொண்டுசேர்ப்பது இவரின் பணியாக இருந்துள்ளது. அதே நேரத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஏ.கே.ஷர்மா ஒரு தலைவலியாக உருவெடுத்துள்ளதாகவே தெரிகிறது.
பாஜக பெரிய தலைகளான மோடி, அமித்ஷா ஆகியோர் ஏ.கே.ஷர்மாவை உ.பிக்கு அனுப்பி தனக்கு நெருக்கடி கொடுப்பதாக யோகி ஆதித்யநாத்துக்கே எண்ணம் இருப்பதாக கூறுகின்றனர். வரும் உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் ஏ.கே.ஷர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனவும் பாஜக வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ஏ.கே.ஷர்மாவுக்கு பெரிய பதவி கொடுக்க வேண்டுமென பிரதமர் மோடி விரும்பினாலும், ஷர்மாவை தூரத்திலேயே வைக்க வேண்டுமென யோகி ஆதித்யநாத் விரும்புகிறார். அரசு செயல்பாடுகளில் ஏ.கே.ஷர்மா தலையிடுவது யோகிக்கு பிடிக்கவில்லை. ஷர்மா இருக்கும் ஆலோசனைக் கூட்டங்களை கூட யோகி தவிர்த்துவிடுகிறாராம். எனவே, உ.பி பாஜகவில் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும்.


No comments:

Post a Comment

Post Top Ad