சசிகலா மீது கோபம்: ஓரங்கட்டும் டிடிவி தினகரன் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

சசிகலா மீது கோபம்: ஓரங்கட்டும் டிடிவி தினகரன் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி?

சசிகலா மீது கோபம்: ஓரங்கட்டும் டிடிவி தினகரன் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி?



அமமுக சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் சசிகலா புகைப்படங்கள் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுகவில் ஈ-பி-எஸ் - ஓ.பி.எஸ். இணைப்புக்கு பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடிம்பத்தினர் கட்சியின் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டனர். அதன்பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், அமமுக எனும் கட்சியை நடத்தி வருகிறார். அதிமுகவை கைபற்றுவது தான் தனது ஒரே நோக்கம் எனவும், அதற்காகவே அமமுகவை ஆரம்பித்ததாகவும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுக அவரை நோக்கி வரும் என பல்வேறு ஆருடங்கள் சொல்லப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக தடாலடியாக அறிவித்தார் சசிகலா. இதனால், அவரது ஆதரவாளர்கள் குறிப்பாக டிடிவி தினகரன் பெரிதும் அப்செட் ஆனார். வெளிப்படையாகவே தனது வருத்ததையும் டிடிவி தினகரன் பதிவு செய்தார். அதேசமயம், அரசியலில் மீண்டும் இறங்குவதற்கான முயற்சிகளையும் சசிகலா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

ஆனாலும், டிடிவியின் செயல்பாடுகளில் சசிகலா அண்மைக்காலமாக அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு சசிகலா ஆதரக்கரம் நீட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா அதனை மறுத்து விட்டார். அதிமுகவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது, அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டால் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதால் சசிகலா மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அமமுக படு தோல்வியடைந்தது.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களை பெற்ற அமமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

இதையொட்டி, அமமுக சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் சசிகலாவின் புகைப்படங்கள் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் சசிகலாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. அமமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் சசிகலாவின் படம் தவிர்க்கப்பட்டுள்ளது அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் சசிகலாவின் புகைப்படங்கள் பெரியளவில் இடம்பெற்ற நிலையில், தற்போது சிறிய அளவில் கூட அவரது புகைப்படங்கள் இல்லாதது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அமமுக வட்டாரங்களிடம் விசாரித்தபோது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு டிடிவி தினகரன் கேட்டபோது, சசிகலா அதனை மறுத்து விட்டதாகவும், இதனால் கோபமடைந்த டிடிவி தினகரன், அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளை கண்டித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் எதிரொலியாகவே சசிகலாவின் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad