பிரிட்டன் செல்வோருக்கு செம குட் நியூஸ் - அரசு சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

பிரிட்டன் செல்வோருக்கு செம குட் நியூஸ் - அரசு சூப்பர் அறிவிப்பு!

பிரிட்டன் செல்வோருக்கு செம குட் நியூஸ் - அரசு சூப்பர் அறிவிப்பு!


வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக பிரிட்டன் நாட்டு அதிரகாரிகள் கூறியதாவது:
முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் எவ்வித பரிசோதனையும் இன்றி பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படுவர். தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்றதடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர், தங்கள் பயணத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்றுடன் வர வேண்டும். பிரிட்டன் வந்த இரண்டாவது நாள் அவர்களுக்கு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை நடத்தப்படும். பிரிட்டனில் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி பணிகள் வெற்றி அடைந்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக, பிரிட்டனில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad