மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை: தமிழக அரசு அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை: தமிழக அரசு அதிரடி உத்தரவு!




தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சி இடங்களுகான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், “நகராட்சி நிர்வாக இயக்குனர் 11ஆம் தேதி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பது தொடர்பான கருத்துருவை அனுப்பியிருந்தார். அவரது கருத்துருவை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கிறது.
அதன்படி, ஆதிதிராவிடர் (பொது), ஆதிதிராவிடர் (பெண்கள்), பொது (பெண்கள்) ஆகிய பிரிவினருக்கு மேயர் பதவி இடஒதுக்கீட்டிற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது) பிரிவுக்கு வழங்கப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad