Pandian Stores: முல்லையின் பிரச்சனை பற்றி கூறும் கதிர்.. அதிர்ச்சியில் தனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

Pandian Stores: முல்லையின் பிரச்சனை பற்றி கூறும் கதிர்.. அதிர்ச்சியில் தனம்!

Pandian Stores: முல்லையின் பிரச்சனை பற்றி கூறும் கதிர்.. அதிர்ச்சியில் தனம்!



பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
முல்லைக்கு போன் பண்ணும் அவள் அம்மா, ஏன் பொங்கலுக்கு இங்க வந்துருக்க வேண்டியதுதான. எல்லாரும் அங்க போயிருக்கீங்க என கோபமாக சண்டை போட்டுவிட்டு போனை வைத்துவிடுகிறாள். அப்போது கதிர் அங்கு வரவும், அவனிடம் அம்மா பேசியதை பற்றி சொல்கிறாள் முல்லை. அதற்கு அவன் அவுங்க சொல்றதும் சரி தான. நீ என்னைக்காவது உன் அம்மா வீட்டுக்கு போறீயா என சொல்கிறான்.அப்போது அவள் நம்ம அங்க வர்றது பற்றிதான் கேட்குறாங்க என்கிறாள். கடை வேலை எல்லாம் முடிஞ்சதும் போகலாம் என்றும் அவன் சொல்கிறான். மறுநாள் கண்ணன், ஐஸ்வர்யா காலேஜ் கிளம்பும் போது, அவர்களுக்கு கொடுத்துவிடும் பணம் பற்றி கணக்கு பேசுகிறாள் மீனா. அப்போது தனமும் வந்து பணம் கொடுக்கிறாள். இரண்டு பேரும் பணத்தை வாங்காமல் நிற்கவும், மீனா நக்கலாக பேசுகிறாள். அவர்கள் போனதும் மீனாவிடம், எதுக்கு அவுங்கள குத்தி காட்ற மாதிரி பேசுற என கேட்கிறாள் தனம்.

நான் உண்மையை தான அக்கா சொன்னேன் என்கிறாள். அதற்கு தனம் அவுங்க காலேஜ் முடிக்குற வரை இப்படியெல்லாம் பேசாத என சொல்கிறாள். இதனிடையில் முல்லைக்கு போன் பண்ணி அவளை தன் குழந்தையின் பிறந்தநாளுக்கு அழைக்கிறாள் பிரெண்ட் ஒருத்தி. அப்போது உனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சுல. ஏதாவது டாக்டரை போய் பார்க்கலாம்ல என சொல்கிறாள்.

இதனை கேட்டு கோபப்படும் முல்லை அவளை திட்டிவிட்டு போனை வைத்து அழுகிறாள். இதனை பார்க்கும் தனம் என்னாச்சும்மா? ஏன் அழுகுற என கேட்கிறாள். அவள் ஒன்னும் இல்லை அக்கா. நான் உள்ள இருக்கேன் என சொல்லி ரூமிற்கு சென்று விடுகிறாள். அதன்பின்னர் வீட்டிற்கு வரும் கதிரிடம், நடந்ததை சொல்லி என்னாச்சு? கொஞ்ச நாளா முல்லை சரியே இல்லை. என்கிட்ட உண்மையை சொல்லு என கேட்கிறாள்.

அதன்பின்னர் குழந்தையை நினைச்சு தான் அவ ரொம்ப வருத்தப்படுற. அவ அம்மால இருந்து எல்லாரும் இதான் கேட்குறாங்க என சொல்கிறான். அதற்கு தனமும் நானும் நினைச்சேன். எனக்கு புரியுதுடா கதிர். நானும் இத்தனை வருஷமா இந்த கேள்வியை பார்த்து இருக்கேன். வா நம்ம போய் அவகிட்ட பேசுவோம் என சொல்லி கூப்பிடுகிறாள் தனம்.

அதன்பின்னர் இருவரும் சேர்ந்து முல்லை அறைக்கு போகின்றனர். கதிரை பார்த்து என்னாச்சுங்க. இந்த நேரத்துல வந்து இருக்கீங்க என சொல்கிறாள். அப்போது தனம் முல்லையை கூப்பிட்டு, உங்கிட்ட பேசணும் வா என சொல்லி ஹாலுக்கு அழைத்து செல்கிறாள். அவளிடம் நீ ஏன் இப்படி இருக்கன்னும் எனக்கு தெரியும். நீ இதுக்கெல்லாம் வருத்தப்படாத, சீக்கிரமே உனக்கு குழந்தை பிறக்கும் என தனம் சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad