'ஹிஜாப்' விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்கும்… ஆளுநர் தமிழிசை பேச்சால் சர்ச்சை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

'ஹிஜாப்' விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்கும்… ஆளுநர் தமிழிசை பேச்சால் சர்ச்சை!

'ஹிஜாப்' விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்கும்… ஆளுநர் தமிழிசை பேச்சால் சர்ச்சை!


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் சீருடை விவகாரத்தில் மாநில அரசு தான் முடிவு எடுக்கும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் சுடுகளிமண் சிற்ப பூங்கா மற்றும் 40 கிலோவாட் சூரிய சக்தி மின்னாற்றல் அமைப்பு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு சுடுகளிமண் சிற்ப பூங்கா மற்றும் 40 கிலோவாட் சூரிய சக்தி மின்னாற்றல் அமைப்பை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது:
"புதுச்சேரியில் 35 லட்சம் ரூபாய்செலவில் இந்த சுடுகளிமண் சிற்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை ஆக்கபூர்வமான திட்டங்கள் இருக்கும். வளர்ச்சியடைந்த புதுமையான மாநிலமாக புதுச்சேரி உள்ளது. சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு குறித்தும், திட்டங்களை கொண்டு வருவது குறித்து பேச தன்னை சந்தித்தனர். சுயேச்சை உறுப்பினர்கள் யாரும் அதிருப்தியாக இல்லை" எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad