டேபிளை உடைத்த பாஜ வேட்பாளர்; வேற லெவலுக்கு இறங்கிய போலீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

டேபிளை உடைத்த பாஜ வேட்பாளர்; வேற லெவலுக்கு இறங்கிய போலீஸ்!

டேபிளை உடைத்த பாஜ வேட்பாளர்; வேற லெவலுக்கு இறங்கிய போலீஸ்!


வாக்குச்சாவடிக்குள் புகுந்து பாஜக வேட்பாளர் டேபிளை உடைத்ததால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் வேற லெவலுக்கு இறங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என, 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதியான நேற்று தேர்தல் நடைபெற்றது.

அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதன்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சி.கே.மகளிர் மேல்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. உடனே அதை சரிசெய்யும் பணியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த 12வது வார்டு பாஜக வேட்பாளர் சுரேஷ்குமார் மற்றும் 10 பேர் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு மேஜையையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருத்தங்கல் போலீசில் அதிகாரி புவனேசுவரன் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுரேஷ்குமார் உள்ளிட்ட 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அருகிலுள்ள நகரங்களின் செய்திகள்


No comments:

Post a Comment

Post Top Ad