பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 8, 2022

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு!

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு!



மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கொரோனா பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே தற்போது அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து பாட வேலைகளிலும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடங்களை தடை இன்றி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “முழு நேரமும் பள்ளிகள் இயங்க வேண்டும். மாணவர்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்த வேண்டும். இதனிடையில் அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் ஆகியவை நடைபெற கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad