இனிமேதான் பிரச்சினை இருக்கு; ஆக்ஷனுக்கு தயாராக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பண விநியோகம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளிட்ட சில சலசலப்புகளுக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது பற்றிய இறுதி வாக்கு சதவீதத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தாலும் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று 19.022022 மாலை 6.00 மணியுடன், அமைதியாக நடந்து முடிந்தது. பல இடங்களில் சிறு பிரச்சினைகள் எழுந்தபோது அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல்துறை தலைவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment