கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை... தீர்ப்பின் முழு விவரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 8, 2022

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை... தீர்ப்பின் முழு விவரம்

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (21) கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியுடன் திருச்செங்கோடு கோயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். பின்னர் மறுநாள் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டும், நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இந்நிலையில் ஜூன் 23 ஆம் தேதி சம்பவத்தன்று கோகுல்ராஜியிடம் கோயிலில் பேசிக்கொண்டிருந்த பெண் பேசிய வீடியோ வழக்கை சூடு பிடிக்க வைத்தது. அந்த வீடியோவில், நானும் கோகுல்ராஜும் காதலர்கள் இல்லை. வெறும் நண்பர்கள் மட்டுமே. கோகுலை கடத்தி சென்றவர்கள் காரில் ' தீரன் சின்னமலை பேரவை' என எழுதியிருந்தது' என கூறினார். பிறகுதான், கோகுல்ராஜை கடத்தியது தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் இறந்துவிட்டார். கடந்த 2 வருடங்களாக மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் '' அரசு தரப்பில் 106 சாட்சியம் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்கள் என 108சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்துள்ள நிலையில் அதில் சிசிடிவி உட்பட 100க்கும் மேற்பட்ட ஆவண பொருட்கள் சமர்பிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி வழக்கை முடித்து வைத்த நீதிபதி சம்பத்குமார் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என அறிவித்தார். மேலும், வரும் 8ம் தேதியான இன்று தண்டனை விவரம் தெரிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி சம்பத்குமார் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை (42 வருடம்) விதிக்கப்படுவதாக அறிவித்தார். அதுபோல, இரண்டாவது குற்றவாளியான யுவராஜின் ஓட்டுநர் அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதர குற்றவாளிகளான குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஆகிய 5 பேருக்கு 2 ஆயுள் தண்டனையும் பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கு பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad