பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - விஜயகாந்த் கடும் கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 22, 2022

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - விஜயகாந்த் கடும் கண்டனம்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 102.16 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. அதே போல் சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக 917 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 50 ரூபாய் உயர்வின் மூலம் 967 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு சிலிண்டர் விலை என ஒரே நாளில் எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதன்படி 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்ந்து வரும் நேரத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கைக்கு பதிலாக, அதன் விலையை மேலும் உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad