2000 ரூபாய் வராதா? ரேஷன் அட்டைதாரர் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 22, 2021

2000 ரூபாய் வராதா? ரேஷன் அட்டைதாரர் அதிர்ச்சி!

2000 ரூபாய் வராதா? ரேஷன் அட்டைதாரர் அதிர்ச்சி




தமிழக அரசு முதல் தவணையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக இரண்டாயிரம் ரூபாயை நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் துவங்கப்பட்டு பொது மக்களுக்கு நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சேலம் அருகே தாசநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வரும் நியாவிலைக் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய்க்கு டோக்கன் முறையில் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நியாய விலை கடையில் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் , முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை பெறாமலேயே, அவருக்கு பணம் பெற்றதாக அவருடைய செல்போனுக்கு செய்தி சென்றுள்ளது.கொரோனா நிவாரணத் தொகை பெறாமலேயே குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் இதுகுறித்து நியாயவிலை கடை ஊழியர் சொக்கலிங்கத்திடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறாமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது். இது குறித்து தகவலறிந்து வந்த மல்லூர் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்பு இதுகுறித்து நியாயவிலை கடை ஊழியரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

பின்னர் நியாயவிலைக் கடை ஊழியர் சொக்கலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் தமிழக முதல்வரின் சமூக வலைதள பக்கத்திற்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad