திருப்பதி கோயிலில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்; பக்தர்கள் மகிழ்ச்சி!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமின்றி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆர்கானிக் முறையில் நெய்வேத்யங்களை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது. இந்த முறையானது சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த ஒன்றாம் தேதி திருமலையில் ஆர்கானிக் நெய்வேத்யம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், வெல்லம், நெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை கொண்டு ஸ்ரீவாரி நெய்வேத்யம் தயாரிக்கப்படும். இந்த முறை 100 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் செயல்பாட்டில் இருந்த வழக்கம் தான். ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment