ஊதியமில்லா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்; தமிழக அரசின் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 18, 2021

ஊதியமில்லா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்; தமிழக அரசின் முடிவு என்ன?

ஊதியமில்லா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்; தமிழக அரசின் முடிவு என்ன?


தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் முதல் அலை ஏற்பட்டதில் இருந்தே தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. வீட்டிலிருந்தே கல்வி கற்க முழு கட்டணத்தையும் ஏன் செலுத்த வேண்டும்.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் கல்வி கட்டணம் செலுத்துவதில் சலுகை காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பெற்றோர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளை மேலாண்மை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் தராமல் பள்ளி நிர்வாகங்கள் காலம் தாழ்த்தி வருகின்றன.

மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழலில் எப்படி ஊதியம் வழங்குவது என ஆசிரியர்களை கட்டாய விடுப்பில் வைத்திருக்கின்றனர். இதனால் ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேறு பணிகளை தேடி அலையும் நிலை உருவாகியிருக்கிறது. குடும்ப செலவுகளுக்காக தடுமாறுகின்றனர். ஓராண்டாக ஊதியம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு

நிவாரணத் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் தரப்பில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய தொகையை ஆசிரியர்களுக்கு தாமதமின்றி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad