மஹாராஷ்டிராவில் மேலும் 9,000 பேருக்கு கொரோனா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

மஹாராஷ்டிராவில் மேலும் 9,000 பேருக்கு கொரோனா

மஹாராஷ்டிராவில் மேலும் 9,000 பேருக்கு கொரோனா



மஹாராஷ்டிர மாநிலத்தில், இன்று ஒரே நாளில், 8 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முதல் அலையை விட, கொரோனா இரண்டாவது அலை மஹாராஷ்டிர மாநிலத்தை கடுமையாக தாக்கி விட்டது.

முழு ஊரடங்கை மஹாராஷ்டிர மாநில அரசு அமல்படுத்தியதன் விளைவாக, தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு சுமார் 70 ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 9 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து, மஹாராஷ்டிர மாநில அரசு வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


மாநிலத்தில் இன்று ஒரே நாளில், 8 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்து 63 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad