எப்போனாலும் என்னை தேடி வரலாம்: தேனி கலெக்டர் அதிரடி!
தேனி மாவட்ட புதிய கலெக்டராக முரளிதரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.
பின்னர் கொரோனா தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டும வரும் அனைத்து நலத்திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தனது பணி இருக்கும்.
மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவராகியா தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், மனுக்கள் அளிக்கலாம் என்றும், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment