பார்களை திறந்து கொள்ளலாம்: மாநில அரசு அதிரடி உத்தரவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

பார்களை திறந்து கொள்ளலாம்: மாநில அரசு அதிரடி உத்தரவு..!

பார்களை திறந்து கொள்ளலாம்: மாநில அரசு அதிரடி உத்தரவு..!


டெல்லியில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஜூன் 28 அதிகாலை 5 மணி வரை ஒரு வார காலத்துக்கு அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மாநிலம் முழுவதும் 50% தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வரும் திங்கட்கிழமை முதல் பார்களை திறக்க அனுமதித்ததுடன் உணவகங்களுக்கான நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பார்கள் 50 சதவீத இருக்கை வசதியுடன் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உணவகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்க அனுமதி இருந்த நிலையில் அதனை 2 மணி நேரம் நீட்டித்து காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக பதிவானது. மே இறுதியில் இருந்து தற்போது வரை தினசரி பாதிப்பு 200க்கும் கீழே வந்ததையொட்டி மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், பொது பூங்காக்கள், கோல்ஃப் கிளப் மற்றும் வெளிப்புற யோகா நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad