ஊரடங்கில் இத்தனை தளர்வுகளா? வெளியாகும் ‘நச்’ அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

ஊரடங்கில் இத்தனை தளர்வுகளா? வெளியாகும் ‘நச்’ அறிவிப்பு!

ஊரடங்கில் இத்தனை தளர்வுகளா? வெளியாகும் ‘நச்’ அறிவிப்பு!




தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலையுடன் நிறைவடைய உள்ளது. அடுத்தகட்ட ஊரடங்கு, அதில் அறிவிக்கப்பட உள்ள தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வந்தது. பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக நேற்று மருத்துவ வல்லுநர்களுடனும், முக்கிய துறை அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள், தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக வளாகங்கள், மால்களை திறக்க அனுமதியளிக்கலாம். அதே சமயம் மால்களில் உள்ள திரையரங்குகள் திறக்க கூடாது என வலியுறுத்தினர்.

கடற்கரை, பூங்கா உள்ளிட்ட மக்கள் பொழுதுபோக்குக்காக கூடும் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என தெரிவித்தனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கலாம். வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.



பேருந்துகளை 50 சதவீதம் பயணிகளுடன் இயக்க அனுமதியளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகளிடமும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


இதைத் தொடர்ந்து நேற்றே தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த முறை தளர்வுகள் அதிகளவில் இடம்பெறும் என்பதால் அறிவிப்பை வெளியிட சற்று தாமதமாவதாக கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம்.

அறிவிப்பு வெளியாகாத நிலையிலும் அரசுப் பேருந்து போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மூலமாக முக்கிய தகவல் பணிமனைகளுக்கு சென்றுள்ளது. பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைத்து பணிமனைகளிலும் ஊழியர்கள் பேருந்துகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் வழக்கம் போல் இயங்கும், ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான தெலங்கானாவின் இந்த முடிவு குறித்தும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து தளர்வுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad