சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி

சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி



நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த மே மாதம் 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 210-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த மே மாதம் 2-ம் தேதி, முதலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, சில மணி நேரத்திற்கு பிறகு, பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad