தேச துரோக வழக்கு: நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன்ஜாமின் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

தேச துரோக வழக்கு: நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன்ஜாமின்

தேச துரோக வழக்கு: நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன்ஜாமின்


தேசத் துரோக வழக்கில், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள மாநில உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் தொற்று கண்டறியப்படுகிறது. 'இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கையில் எடுத்துள்ள உயிர் ஆயுதமாக கருதுகிறேன்' என கருத்து தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, லட்சத்தீவுகளின் பா.ஜ.க., தலைவர் அப்துல் காதர் ஹாஜி கவரத்தி போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோகம், அரசின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி, நடிகை ஆயிஷா சுல்தானா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எப்போதெல்லாம் போலீஸ் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனையுடன், ஒரு வாரத்திற்கு முன்ஜாமின் வழங்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad