இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! எங்கு தெரியுமா?



மத்திய பிரதேச மாநிலம் போபாலில், புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு போன்ற மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, 60 ஆயிரமாக சரிவடைந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து பரவியதாகவும், இரண்டாவது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் என்றும், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை விட, இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகை வைரஸ், கவலை அளிக்கக் கூடியதாக இருக்காது என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், கொரோனா நோயை உண்டாக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த வகை வைரஸின் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார். புதிய வகை கொரோனா வைரஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad