பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்களா நீங்கள்? காவல்துறை முக்கிய அறிவிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்களா நீங்கள்? காவல்துறை முக்கிய அறிவிப்பு..!

பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்களா நீங்கள்? காவல்துறை முக்கிய அறிவிப்பு..!

Toxic madan 18+ யூடியூப் சேனலில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை விளையாடி வந்த புகாரில் சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரது மனைவி கிருத்திகா மற்றும் தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பப்ஜி மதனின் யூடியூப் சேனலின் அட்மினாக செயல்பட்டு வந்தது தெரிய வரவே அவர் கைது செய்யப்பட்டார். மனைவியை விசாரணைக்கு அழைத்து வந்தால் தலைமறைவாகியுள்ள மதன் தாமாக சரண் அடைவார் என தந்திரத்தை போலீசார் நடத்தினர்.

இந்நிலையில், தர்மபுரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை தனிப்படையினர் இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது சேலத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்ற தனிப்படையினர் மதனின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று இரவு மதனை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர்.

முன்னதாக, பப்ஜி மதன் யூடியூப் வீடியோக்களில் ஆபாசமாக பேசி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்தும் அதனால் விலையுயர்ந்த கார்களை வாங்கி பப்ஜி மதன் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

மேலும், அவரது சப்ஸ்கிரைபர்கள் மூலம் பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் பண பரிவர்த்தனை மூலமாக அவர் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை மற்றும் பிட்காயினில் முதலீடு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியானது. இதன் மூலம், பல்வேறு சிறுவர்கள், சிறுமிகள் வீட்டுக்கு தெரியாமல் மதனின் வங்கி கணக்கிற்கு ஆர்வக்கோளாறில் பணத்தை செலுத்தியிருக்கலாம் என்றும் அப்படி நடந்திருப்பின் அப்பணத்தை உரியவர்களுக்கு திருப்பி வழங்கவும் சாத்தியமுள்ளது. இந்நிலையில்,

No comments:

Post a Comment

Post Top Ad