சேலத்தில் ஒரு சாத்தான்குளம் சம்பவம்; அதுவும் அதே மாசத்தில் - டிடிவி வேதனை!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள இடையப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி முருகேசன். இவர் தனது பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்கு நண்பர்களுடன் மதுவாங்கச் சென்றுள்ளார். பின்னர் மது அருந்தி விட்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏத்தாப்பூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் முருகேசனை போலீசார் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் முருகேசனை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் தான் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் கஸ்டடியில் உயிரிழந்தனர். வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment