ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி சொல்லும் முன்னாள் முதல்வர் ஊர் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி சொல்லும் முன்னாள் முதல்வர் ஊர் மக்கள்!

ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி சொல்லும் முன்னாள் முதல்வர் ஊர் மக்கள்!



சேலம் சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக அதை அனுமதிக்க மாட்டோம் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.

அதன்படி தற்போது ஆட்சிக்கு வந்த திமுக இந்த திட்டத்தை ரத்து செய்வதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.


சேலம் சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்தை விவசாயிகள் பாதிக்கும் வகையில் இருப்பதால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி தமிழ்நாட்டில் அதனை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு சேலம் சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற அச்சாரமாக பிரதமரின் சந்திப்பு இருந்ததாகவும் தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த செயலுக்கு தங்களின் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளனர்



No comments:

Post a Comment

Post Top Ad