நாடே ஆபத்தான பாதைல போகுது.. உத்தவ் தாக்கரே எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

நாடே ஆபத்தான பாதைல போகுது.. உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!

நாடே ஆபத்தான பாதைல போகுது.. உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!




நாடே சமூக அமைதியின்மையை நோக்கி செல்வதாக சிவ சேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். மேலும், வெறும் ஆட்சியை பிடிப்பதற்காக ஆட்சிக்கு வருவதா அல்லது பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆட்சிக்கு வருவதா என அரசியல் கட்சிகள் முடிவு செய்யவேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.


சிவ சேனாவின் 55ஆவது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “அரசியலில் வெற்றி மட்டும் பெற வேண்டுமா அல்லது பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமா என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவுசெய்ய வேண்டும்.

சமூக பதற்றம் என்பது கடுமையான சொல்லாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நம் நாடு சமூக அமைதியின்மையை நோக்கி பயணிக்கிறது. மக்கள் பிரச்சினையை தீர்க்க ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது அதிகாரத்துக்காக மட்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமக்கு முன் இருக்கும் பொருளாதார, சுகாதார சவால்களுக்கு தீர்வு காண வழிகளை கண்டறியாமல் சந்தேக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் நாம் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்வோம்” என்று எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad