பள்ளிகள் திறப்பு: 100 % வரவேண்டும் - வெளியாகும் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

பள்ளிகள் திறப்பு: 100 % வரவேண்டும் - வெளியாகும் அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பு: 100 % வரவேண்டும் - வெளியாகும் அறிவிப்பு!


கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியாமல் உள்ளனர். இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளிகளைத் திறக்க தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டிலும் விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஜூலை 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் பாடக் குறிப்பேடு, செயல்திட்ட குறிப்பேடு, தினமும் எழுதி அதை தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் மட்டும்தான் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 100 சதவீத அளவில் பள்ளிக்கு வந்தால்தான் பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக தெரிவிக்க முடியும் என்பதால் அவர்களை முழுமையாக பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad