நாங்க சொல்லிதான் 10.5% இடஒதுக்கீடு... மார்த்தட்டும் வேல்முருகன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

நாங்க சொல்லிதான் 10.5% இடஒதுக்கீடு... மார்த்தட்டும் வேல்முருகன்!

நாங்க சொல்லிதான் 10.5% இடஒதுக்கீடு... மார்த்தட்டும் வேல்முருகன்!

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கலைஞர் ஆட்சியின்போது 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார். 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

அதிமுக ஆட்சியில் ஒரு நடைமுறை சிக்கலும் இல்லை. வன்னியர் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய போடப்பட்ட ஒப்பந்தம்தான் அதிமுக அரசின் அறிவிப்பு 10.5% இடஒதுக்கீடு. நடைமுறைப்படுத்த முடியாத அறிவிப்பதாக அதிமுக வெளியிட்டது. முதல்வர் அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.



தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் இதை நடைமுறைப்படுத்தி உள்ளார். இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், வீடும் கட்டி தரவேண்டும் என்று முதல்வரிடம் கோரிகை வைத்தோம். அதனை அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என்று வேல்முருன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad