முந்துங்கள் மக்களே ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி: சேலம் மாநகராட்சி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

முந்துங்கள் மக்களே ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி: சேலம் மாநகராட்சி அறிவிப்பு!

முந்துங்கள் மக்களே ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி: சேலம் மாநகராட்சி அறிவிப்பு!


சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த 3ஆம் தேதி 138 மையங்கள் மூலம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து 8 நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் தினந்தோறும் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் இருப்பு இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை இருந்து வருகிறது.

இந்த சூழலில் சென்னையிலிருந்து சேலத்திற்குத் தடுப்பூசி வந்ததையடுத்து மாவட்டம் முழுவதும் 138 மையங்களில் தடுப்பூசி முகாம் சேவை நேற்று தொடங்கியது.
மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் 22 ஆயிரத்து 640 பேருக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 பேருக்குத் தடுப்பூசி போட இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் நடைபெறும் 138 மையங்களில் தடுப்பூசி போட இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் சீல்டு ஊசி மட்டுமே இருப்பு உள்ளதால் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடுகிறவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad