ஸ்புட்னிக் தடுப்பூசியை செப். முதல் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது!
இந்தியாவில், வரும் செப்டம்பர் மாதம் முதல், ரஷ்யாவின், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்தியாவில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், போதுமான தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை.
இது தொடர்பாக, ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா மையத்தில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment