கோவை: நாயால் மிரண்டுபோன காட்டு யானை, தண்ணீருக்காக வந்து குடிக்காமல் சென்றது!
தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான கோவை ஆனைக்கட்டி கங்கா சேம்பரில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் காட்டு யானை ஒன்று வந்தது.
யானையை கண்டு அந்த பகுதியிலிருந்த நாய் கத்தியதால், அதனை யானை தூரத்தியது. இதனால், ஆனைக்கட்டி சாலையில் சென்றவர்கள் மிரண்டு அப்படியே நின்றனர்.
தகவலறிந்து வந்த கோவை வனசரகத்திற்குட்பட்ட வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். சுமார் இருபது நிமிடம் யானை சாலையிலேயே நின்றதால் ஆனைக்கட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால், வாகனங்கள் ஆங்காங்கே நின்றது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்காமல் யானை வனத்திற்குள் திரும்பிச்சென்றது. இதையடுத்து, போக்குவரத்து விடுவிக்கப்பட்டு சாலையில் மக்கள் செல்ல அனுமதிக்மப்பட்டனர்.
No comments:
Post a Comment