நாட்டுக் கோழி பண்ணையை அழிக்க தண்ணீரில் விஷம்: உளுந்தூர்பேட்டையில் இப்படி ஒரு செயல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

நாட்டுக் கோழி பண்ணையை அழிக்க தண்ணீரில் விஷம்: உளுந்தூர்பேட்டையில் இப்படி ஒரு செயல்!

நாட்டுக் கோழி பண்ணையை அழிக்க தண்ணீரில் விஷம்: உளுந்தூர்பேட்டையில் இப்படி ஒரு செயல்!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாசுரேஷ். விவசாயி. நாட்டுக்கோழி வளர்ப்பு தொழிலை செய்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து 200க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். இந்த சூழலில் நள்ளிரவில் இவரது கோழி பண்ணைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்குள்ள தண்ணீர் குழாயில் விஷத்தை கலந்து சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து விஷம் கலந்த தண்ணீரை அருந்திய 50க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசுரேஷ் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad