சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம் நித்திய கல்யாணி... எப்படி சாப்பிட வேண்டும்...
ஆயுர்வேதமானது பல வகையான நோய் தீர்க்கும் மூலிகைகளை கொண்டுள்ளது. பழங்காலத்தில் மேம்பட்ட ஒரு மருத்துவ முறையாக ஆயுர்வேத முறை இருந்துள்ளது. இந்த மூலிகைகள் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சரி செய்வதற்கும் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கும் உதவுகிறது. மேலும் இந்தியாவில் பல காலங்களாக ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கிய இடம் இருந்துள்ளது. அறிவியல் மருத்துவம் வருவதற்கு முன்பு வரை இங்கு ஆயுர்வேத மருத்துவமே பயன்பாட்டில் இருந்துள்ளது.
தற்சமயம் நவீன அறிவியல் மருத்துவ முறைகள் வந்த பிறகும் கூட இன்னும் பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டே நமது மக்கள் தீர்வு கண்டு வருகின்றனர். தற்சமயம் உலக மக்கள் அனைவரிடமும் அதிகமாக இருக்க கூடிய நோயாக நீரிழிவு நோய் உள்ளது. ஆயுர்வேதத்தில் இரத்தத்தில் அதிகமாகும் இந்த சர்க்கரை அளவை குறைக்க உதவக்கூடிய பல வகையான மூலிகைகள் உள்ளன.
நீரிழிவு நோய் என்பது மாறிவரும் உணவு கலாச்சாரத்தால் உருவான ஒரு நோய் ஆகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நித்திய கல்யாணி மூலிகையை குறித்து நாம் அறிவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியலாம். எனவே நித்திய கல்யாணி நமது உடலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என இப்போது பார்க்கலாம்.
நித்திய கல்யாணி இந்தியாவில் எளிதாக கிடைக்க கூடிய ஒரு தாவரமாகும். இது மடகாஸ்கரை பூர்வீகமாக கொண்ட தாவரம் என கூறப்படுகிறது. பல இடங்களில் இந்த தாவரம் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தாவரமாகும். மலர்களையும் அடர் பச்சை நிற இலைகளையும் கொண்ட இந்த தாவரம் டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
No comments:
Post a Comment