தமிழகத்தை மூன்று முதல்வர் ஆள்கிறார்களாம்... இது அண்ணாமலை அட்டாக்!
தமிழிசை சௌந்தரராஜன் காலந்தொட்டே தமிழக பாஜகவில் கான்ட்ரவர்சியான கருத்துகளுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை.
இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை ஐபிஎஸ் தற்போது ஒரு கருத்தை கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த பதிவில், "தமிழகத்தை தற்போது மூன்று முதல்வர்கள் ஆட்சி செய்வதாக அண்ணாமலை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசனும் தமிழகத்தை ஆட்சி புரிவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை தாமாக சொல்லவில்லை என்றும், மக்களும், பிசினஸ்மேன்களும் சொல்கிறார்கள் என்று கூறியுள்ள அவர் ஆட்சி, அதிகாரத்தில் ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதுதான் திமுகவின் சித்தாந்தமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment