மின் கட்டண முறையில் மாற்றம்; அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!
தமிழகத்தில் மாதம் இருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சூழலில் கடந்த சட்டமன்ற
தேர்தலின் போது, ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்தும் முறை தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்தலில் அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்த சூழலில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுக ஆட்சியின் ஊழல்கள்
அதேசமயம்
கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்த விசாரணையையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன்
நிலக்கரி மாயமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment