குறையும் கொரோனா: அரசு வெளியிட்ட புதிய தளர்வுகள்!
கொரோனா பரவல் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சனிக் கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு
தளர்வுகளை அறிவித்தார்.
அந்தவகையில் இன்று காலை முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
*ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 119 நாள்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுகின்றன ஓசூரில் இருந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு நள்ளிரவு முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
*நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில்
இன்று முதல் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றே திரையரங்குகள் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றன.
*உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment