நீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆஜராக உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

நீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆஜராக உத்தரவு!

நீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆஜராக உத்தரவு!

அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி உத்தரவிட்டனர். பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என கூறிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஓபிஎஸ்-யை கிண்டலடிக்கும் வகையிலும் தெரிவித்த கருத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றிய புகழேந்தி கட்சியி இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராக

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதால் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, செப்டம்பர் 14ஆம் தேதி இருவரும் ஆஜராக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். மேலும், தங்களுக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளதாலும், ஆஜராக உத்தரவிடப்பட்டிருப்பதாலும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad