அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!

அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதை அடுத்து, வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல், கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து, மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால், கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தபாடில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை கேரள மாநில அரசு அமல்படுத்தியதன் விளைவாக, கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. 33 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, 20 ஆயிரமாக குறைந்துள்ளது. இதை அடுத்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை திரும்ப பெறப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.

மேலும் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்றும், கூடிய விரைவில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.

கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவரும் குறைந்தது கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசாவது போட்டிருக்க வேண்டும் என்றும், தகுதி உள்ள மாணவர்கள், இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad