பெண்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..! இனி, என்.டி.ஏ.,வில் சேரலாம் - மத்திய அரசு குட் நியூஸ்!
என்.டி.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில், பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நடைமுறை மூன்று வழிகளில் நடைபெறுகிறது. இந்திய ராணுவ அகாடமி (IMA), அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA), தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) ஆகியவற்றில் முப்படைகளுக்கான அதிகாரிகளைத் தயார் செய்யும்
நோக்கில் பயிற்சிகள் நடைபெறும்.
இந்த அகாடமிகளுக்குள் நுழைய வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு கட்டாயம். 16 வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் நுழைவுத் தேர்வு எழுதி அகாடமியில் இணைந்து பயிற்சிகளைப் பெற முடியும். இவற்றில் ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ., ஆகிய அகாடமிகளில், ஆண், பெண் என இரு பாலருக்கும் அனுமதி இருக்கிறது.
ஆனால், என்.டி.ஏ., அகாடமியில் ஆண்கள் மட்டுமே நுழைவுத் தேர்வு எழுத முடியும்.
பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், ஏராளமான பெண்கள் இந்த அகாடமிக்குள் நுழைய வேண்டும் என்றும், தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்குமாறும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இச்சூழலில் உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் சார்பாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
No comments:
Post a Comment