கார்களில் இனி இசை கருவிகள் ஒலி, ஒன்றிய அமைச்சருக்கு கணநேரத்தில் வந்த யோசனை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

கார்களில் இனி இசை கருவிகள் ஒலி, ஒன்றிய அமைச்சருக்கு கணநேரத்தில் வந்த யோசனை

கார்களில் இனி இசை கருவிகள் ஒலி, ஒன்றிய அமைச்சருக்கு கணநேரத்தில் வந்த யோசனை

வாகனங்களில் இந்திய இசைக்கருவிகளின் ஒலியை உள்ளடக்கிய 'ஹார்ன்' அமைப்பதை குறித்து வாகன உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர், ''நான் நாக்பூரில் 11 வது மாடியில் வசிக்கிறேன். நான் தினமும் காலையில் 1 மணி நேரம் பிராணாயாமம் செய்கிறேன். அப்போது, சாலையில் செல்லும் வாகனங்களின் ஹார்ன் சத்தங்கள் எனக்கு தொந்தரவை கொடுக்கிறது.

இந்த பிரச்சனைக்கு பிறகு, வாகனங்களின் ஹார்ன் சத்தம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. கார் ஹார்ன்களின் ஒலி இந்திய இசை கருவிகளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சிந்திக்கத் தொடங்கினோம். அதன்படி, கார்களின் ஹார்னில் இருந்து தபலா, தாள வாத்தியம், வயலின், புல்லாங்குழல் போன்ற கருவிகளின் சத்தம் வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.

இந்த விதிகள் சில வாகன உற்பத்தியாளர்களுக்கு பொருந்தும். எனவே, வாகனம் தயாரிக்கப்படும் போது, கார் ஹாரன்களில் இசை கருவிகள் சத்தம் ஒலிப்பதை போல தயாரிக்கப்படும் என கூறினார்.


தொடர்ந்து பேசியவர், இந்தியாவில் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 100 லட்சம் கோடி மதிப்பீட்டில் பிரதமரின் கதிசக்தி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என கூறினார்.கதிசக்தி திட்டம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad