தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர வீழ்ச்சி அல்ல; மீண்டும் எழுச்சி பெறுவோம்: விஜயகாந்த் நம்பிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர வீழ்ச்சி அல்ல; மீண்டும் எழுச்சி பெறுவோம்: விஜயகாந்த் நம்பிக்கை!

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர வீழ்ச்சி அல்ல; மீண்டும் எழுச்சி பெறுவோம்: விஜயகாந்த் நம்பிக்கை!

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர வீழ்ச்சி அல்ல; உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., பலத்தை நிச்சயம் நிரூபிப்போம் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில், விடுபட்ட 9 மாவட்டங்களில், 2 கட்டங்களாக, அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தே.மு.தி.க., 17 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2021 அன்று 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 
இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – பகுதி – வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உங்கள் பகுதியிலேயே கழக கொடியை ஏற்றி, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்கிற கொள்கையின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad