மூன்று நாட்கள் தொடர் விடுமுறை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், வீடுகளில் வைத்து கொண்டாடப்படும் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொதுவாக பண்டிகை நாட்களுக்கு தமிழகத்தில் இருந்து உள் மாவட்டங்களுக்கும் மற்றும் மாநிலங்களுக்குமிடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ''சென்னையிலிருந்து வழக்கமாக 2,250 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 8ம்தேதி 300 பேருந்துகளும், 9ஆம் தேதி 600 பேருந்துகளும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல, விடுமுறை முடிந்து திரும்பும் போதும் அதிக அளவிலான பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad