அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர் அவர்: சசிகலா தகவல்!
சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் 31 ஆம் தேதி கவிஞர்
புலமை பித்தன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல் நலம் குறித்து, மருத்துவமனையில் உள்ள இருதய நோய் நிபுணர் சஞ்சீவ் அகர்வாலிடம் சசிகலா நேரில் சென்று
விசாரித்தார். மேலும் புலமை பித்தனின் பேரன் திலீபன் மற்றும் உறவினர்களிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “புலமை பித்தன் தலைவர் மீதும் அம்மா மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்ட மேலவை துணை தலைவராகவும், அரசவை கவிஞராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சுற்றுலா வளர்ச்சிகழக தலைவராகவும், கழகத்தின் அவை தலைவராகவும் பதவிவகித்தார்” என்றார்.
புலமை பித்தனையும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் பிரித்து பார்க்க முடியாது அந்த அளவிற்கு தலைவர் மீதும் அம்மா மீதும் மிகுந்த பாசத்துடன் இருந்தவர். தமிழ் திரைப்படங்களில் நிறைய
பாடல்களை எழுதியுள்ளார். அதே சமயம் இதய கனி என்ற படத்தில் தலைவருக்காக நீங்கள் நல்லா இருக்கோனும் நாடு முன்னேற என்ற பாடலை எழுதியவர் என்றும் சசிகலா தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் பட்டி தொட்டியெல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகதிற்கு தோல் கொடுத்து நின்றது இந்த பாடல். பெரியவர் புலமை பித்தன் விரைவில் குணமடைய வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றும் சசிகலா
அப்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment