பெட்ரோல், டீசல், எரிவாயு விலைக்கு நாங்கள் பொறுப்பல்ல: பாஜக - வேற யாரு சார்?
கர்நாடகாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால்தான் உலகளாவிய எரிபொருள் விநியோக பிரச்சனைகள் மற்றும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜூலை முதல் பல மாநிலங்களில்
பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.34, டீசல் விலை லிட்டருக்கு .7 88.77. மும்பையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 107.39 க்கும், டீசல் ரூ. 96.33 க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் பாஜகவைச் சார்ந்த எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உரிய விளக்கத்தை அளிக்காமல் கேள்வியை கடத்தி வருகின்றனர். அண்மையில் கர்நாடகாவின் ஹூப்ளி-தார்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெலாட் இதுகுறித்து பேசினார். அப்போது அவர், ஆப்கானிஸ்தானில் தலிபான் பிரச்சனை தொடங்கியதில் இருந்து, உலகம் முழுவதும் எரிபொருள்
விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தன. இது இந்தியாவில் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோலின் விலை அதிகரிக்க வழிவகுத்துள்ளது என கூறினார்.
இதே பிரச்சினையை கடந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேட்கப்பட்டபோதும் கடும் அமளி உருவானது.
No comments:
Post a Comment