தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு? அடுத்தடுத்த அதிர்ச்சி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு? அடுத்தடுத்த அதிர்ச்சி..!

தமிழகத்தில் அமலாகுமா கடும் ஊரடங்கு உத்தரவு? அடுத்தடுத்த அதிர்ச்சி..!

தமிழகத்தில் இரண்டாம் அலை குறைந்துள்ள சூழலில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறந்துள்ளது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் பணிகளை வகுத்து வரும் நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் புதிய C.1.2 வைரஸ் படிப்படியாக அடுத்தடுத்த நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.
மேலும், அந்த வைரஸ் மனித உடலைப் பாதுகாக்கும் ஆன்டிபாடிகளை அழிக்க கூடிய அளவிற்கு ஆற்றல் மிகுந்ததாக இருக்கலாம் என்றும் தடுப்பூசியினாலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 8-ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மா. சுப்ரமணியன்

அதே சமயம் தற்போது நோய் தொற்று கண்டறியப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது‌ என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறுகிறார்.


சைதாப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, கேரளாவில் ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்படும் போதே கேரளா தமிழக எல்லையில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad