மாணவர்களுக்கு தடுப்பூசி: அரசு எடுக்கும் சூப்பர் நடவடிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

மாணவர்களுக்கு தடுப்பூசி: அரசு எடுக்கும் சூப்பர் நடவடிக்கை!

மாணவர்களுக்கு தடுப்பூசி: அரசு எடுக்கும் சூப்பர் நடவடிக்கை!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப்பிறகு இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப்பிறகு இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கல்லூரி மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரி முதல்வர் அவர்களால் மாணவர்களுக்கு விதிமுறைகள் சொல்லித்தரப்பட்டு அதற்கான பிரிண்ட் அவுட்டும் தரப்பட்டிருக்கிறது. அட்மிஷன் முடித்து கல்லூரிக்கு வருகின்ற போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு வகுப்பறைக்கு வர வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதோடுமட்டுமின்றி வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள் யாரேனும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad