கொரோனா தடுப்பூசி சான்று கிடைக்கலையா? இதோ சூப்பரான வழி!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையில் வெறுமனே பாதிப்புகள் மட்டுமே அதிகமாக இருந்தன. ஆனால் இரண்டாவது அலை கொத்து, கொத்தாக உயிர்களை பலிவாங்கி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதன் காரணமாக தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசும், மக்களும் முடிவு செய்தனர். தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கின்றன.
தமிழகத்தில் தடுப்பூசி பயன்பாடு
அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தடுப்பூசிகளை மத்திய அரசு பகிர்ந்தளித்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 3.63 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில் 38.3 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். 9.7 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டனர். அதிகப்படியான தடுப்பூசி பயன்பாட்டால் தொற்று பரவுவது பெரிதும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கொரோனா பாசிடிவ் விகிதம் 1 சதவீதமாக காணப்பட்டது.
தடுப்பூசியால் ஏற்படும் நன்மை
குணமடையும் விகிதம் 98 சதவீதமாக உள்ளது. சிலருக்கு தடுப்பூசி போட்ட பின்னரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சில சமயங்களில்
தடுப்பூசி போட்ட பின்னரும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய ஆபத்தான சூழல் மற்றும் உயிரிழப்புகள் நேராமல் தடுப்பூசி தடுக்கிறது என்று குறிப்பிட்டார். இவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கோவின் ஆப் மற்றும் இணையதளம் மூலம் சான்று அளிக்கப்படுகிறது.
சான்று பிரச்சினைக்கு தீர்வு
இதனை வேலை செய்யும் இடங்களில், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் சிலருக்கு தடுப்பூசி சான்று கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் முக்கிய உத்தரவு
ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களில் சிலருக்கு அதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப் பெறவில்லை.
No comments:
Post a Comment