மத்திய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம்... ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

மத்திய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம்... ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

மத்திய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம்... ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை விவகாரத்தில் இவ்வாறு அறிவுறுத்தியுள்ள அவர், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ' மதுரை தோப்பூரில், 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையை கட்ட 'ஜைக்கா' நிதி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,இரண்டாண்டுகளில் எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரியை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவரை, 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க, 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தி கொள்ளலாம். இரண்டாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டி முடிக்கப்பட்ட பின் மாணவர்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம்' என்று மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பயில மத்திய அரசு வாய்ப்பளித்தும், அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கக் கூடியது.

எய்ம்ஸ் கட்டப்பட்டு வரும் பிற மாநிலங்களில், தற்காலிக இடங்களில் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் படிப்பை தொடங்கி விட்டனர். எனவே, மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஆற்றி போராடி கொண்டிருந்தால், மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad